கடலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை
கடலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை
செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வந்தவர் நிலவழகன் என்ற சுபாஷ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கொலை குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.