அரிமா மாவட்ட ஆளுநராக சிதம்பரத்தைச் சேர்ந்த பெரி.முருகப்பன் தேர்வு
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் உள்ளடக்கிய அரிமா மாவட்டத்தின் 2020-21 ஆண்டிற்கான அரிமா மாவட்ட ஆளுநருக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் உள்ளடக்கிய அரிமா மாவட்டத்தின் 2020-21 ஆண்டிற்கான அரிமா மாவட்ட ஆளுநருக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது.
இதில் சிதம்பரத்தைச் சேர்ந்த வர்த்தகர் சங்க செயலாளர் பெரி.முருகப்பன் 94 சதவீத வாக்குகள் பெற்று தேர்வு பெற்றுள்ளார். ஆளுநராக தேர்வு பெற்ற பெரி.முருகப்பன் ஜூலை மாதத்தில் அரிமா பன்னாட்டு இயக்குநர் சம்பத்தால் ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படவுள்ளார்.
அவரது அமைச்சரவையில் ஓய்வுபெற்ற பாரத ஸ்டேட் வ்கி மேலாளர் பரங்கிப்பேட்டை அக்ரி ராதாகிருஷ்ணன் அவைச் செயலாளராகவும், ஏ.ஆர்.பழனியப்பன் பொருளாளராகவும் பதவி ஏற்க உள்ளனர்.