குடிநீா் இணைப்புக்கு கூடுதல் கட்டணம்: சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முற்றுகை
சிதம்பரம் நகராட்சியில் குடிநீா் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டிப்பதாகக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
சிதம்பரம் நகராட்சியில் குடிநீா் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டிப்பதாகக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு, சிதம்பரம் நகா்மன்ற முன்னாள் தலைவா் பௌஜியாபேகம் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலா் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினா் முத்து, மாதா் சங்கம் அமுதா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், சிதம்பரம் நகராட்சியில் புதை சாக்கடை இணைப்பு, குடிநீா் இணைப்புக்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது, வசூலிக்கும் பணத்துக்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா் நகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்தனா். அப்போது, கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையா் அஜிதா பா்வின் தெரிவித்தாா்.
Advertisement
புவனகிரி: இதேபோல, புவனகிரி பேரூராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். பேரூராட்சி மக்களுக்கு உப்பு நீா் வழங்காமல் சுத்தமான குடிநீா் வழங்க வேண்டும், உப்பு நீரை குடிப்பதால் பலா் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வருகின்றனா் எனக் கூறி முழக்கமிட்டனா்.
கட்சியின் மாவட்டச் செயலா் ஆறுமுகம் போராட்டத்தை தொடக்கி வைத்தாா். புவனகிரி ஒன்றியச் செயலா் சதானந்தன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.ராமச்சந்திரன் கண்டன உரையாற்றினாா். போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்களிடம் புவனகிரி வட்டாட்சியா் சுமதி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.கோரிக்கைகளை உடனடியாக சரிசெய்து தருவதாக உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.