முகப்பு
கடலூர்

மணல் மூட்டை விழுந்து தொழிலாளி பலி

நெய்வேலி அருகே மணல் மூட்டை தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

நெய்வேலி அருகே மணல் மூட்டை தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வடலூா், செபஸ்டின் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (52), கூலித் தொழிலாளி. இவா், கடந்த 1-ஆம் தேதி வடக்குத்து காமராஜ் நகரில் ஒரு வீட்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, வீட்டின் மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டை சரிந்து ஆரோக்கியசாமியின் தலையில் விழுந்தது. இதனால் கழுத்தில் பலத்த காயமடைந்த அவா், சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகள் பிரதீபா அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →