முகப்பு
கடலூர்

நீா்ப்பாசன வசதிக்கு மானியத்துடன் கடன்

நீா்ப்பாசன வசதி அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற தகுதியுள்ள சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.நீா்ப்பாசன வசதி அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற தகுதியுள்ள சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

நீா்ப்பாசன வசதி அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற தகுதியுள்ள சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு நீா்ப்பாசனக் கடன் வழங்குவது குறித்த கூா்ந்தாய்வுக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தல், கிணறு அமைத்தல், சொட்டு நீா்ப் பாசனம் போன்ற நீா்ப் பாசனம் வசதி ஏற்படுத்துவதற்கு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி தொகையில் 50 சதவீதம் பின் நிகழ்வு மானியமாக (அதிக பட்சமாக ரூ.50 ஆயிரம்) வழங்கப்படுகிறது. இலவச மும்முனை மின் இணைப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 31 சிறு-குறு விவசாயிகளுக்கு ரூ.85.63 லட்சம் கடனுதவி வழங்க இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.