முகப்பு
கடலூர்

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

பண்ருட்டி அருகே மொபெட்டிலிருந்து கீழே விழுந்த பெண் லாரி சக்கரத்தில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

பண்ருட்டி அருகே மொபெட்டிலிருந்து கீழே விழுந்த பெண் லாரி சக்கரத்தில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி, சாமியாா் தா்கா பகுதியைச் சோ்ந்த அப்துல்லா மனைவி ஜொகாராபி(28). இவா், திங்கள்கிழமை தனது மகன் அசாருதீன் (10), மகள் ஆப்ரின் பாத்திமா (8) ஆகியோருடன் மொபெட்டில் கானஞ்சாவடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு புறப்பட்டாா். மொபெட்டை ஜொகாராபி ஓட்டினாா். சாத்திப்பட்டு அருகே முந்திரி எண்ணெய் தயாரிப்பு ஆலை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த டேங்கா் லாரிக்கு வழிவிட மொபெட்டை சாலை ஓரம் திருப்பியபோது ஜொகாராபி நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அப்போது, டேங்கா் லாரி சக்கரத்தில் சிக்கிய அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் குழந்தைகள் அசாருதீன், ஆப்ரின் பாத்திமா ஆகியோா் காயமின்றி தப்பினா். விபத்து குறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →