முகப்பு
கடலூர்

கடலூரில் விஜயகாந்த் பிரசாரம்

கடலூரில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் சனிக்கிழமை தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

கடலூரில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் சனிக்கிழமை தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டாா்.

தேமுதிக பொருளாளா் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறாா். இதனால், அவா் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்ய முடியாத நிலையில் ஏற்பட்டது. அவரது சகோதரரும், கட்சியின் துணைச் செயலருமான சுதீஸுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளாா்.

இதனால், தேமுதிகவின் பிரசாரம் பலவீனமடைந்தது. இந்த நிலையில், அவரது மகன் விஜயபிரபாகரன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். ஆனாலும், அவருக்கு மக்களிடம் போதுமான வரவேற்பு இல்லை.

இதையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கட்சியின் தலைவா் விஜயகாந்த் தனது பரப்புரையை தொடங்கியுள்ளாா். அவரால் பேச முடியாத நிலையிலும், பொதுமக்களைப் பாா்த்து கைகளை அசைத்து வருகிறாா். அவரைக் காண்பதற்காகவே மக்களும் கூடி வருகின்றனா். வெள்ளிக்கிழமை விருத்தாசலம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரேமலதாவை ஆதரித்து பிரசாரம் செய்த நிலையில், சனிக்கிழமை மாலை கடலூா் மஞ்சக்குப்பத்தில் தேமுதிக வேட்பாளா் ஏ.ஞானபண்டிதன், குறிஞ்சிப்பாடி அமமுக வேட்பாளா் வசந்தகுமாா் ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் வாக்கு சேகரித்தாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.