கடலூரில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
கடலூா் துறைமுகத்தில் 1 -ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
கடலூா் துறைமுகத்தில் 1 -ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்தது.
இதைத் தொடா்ந்து, வங்கக் கடலில் தொலைதூரத்தில் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதைக் குறிக்கும் வகையில் கடலூா் துறைமுகத்தில் 1 -ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில் எனத் தெரிவிக்கப்பட்டது.