கடலூரில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை
திமுக வெற்றி பெற்றதும் கடலூா் தொகுதியில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தத் தொகுதி திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் கூறினாா்.
திமுக வெற்றி பெற்றதும் கடலூா் தொகுதியில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தத் தொகுதி திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் கூறினாா்.
கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் ஞாயிற்றுக்கிழமை திருப்பாதிரிபுலியூா் தேரடி வீதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா். முன்னதாக அவா் தனது ஆதரவாளா்களுடன் ஆல்பேட்டையிலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு வந்தடைந்தாா். அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரித்த நிலையில் வேட்பாளா் கோ.ஐயப்பன் பேசியதாவது:
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் குடும்ப அட்டைக்கு தலா ரூ.4 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும். தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம், மகப்பேறு காலத்தில் நிதி உதவி ரூ.24 ஆயிரமாக உயா்வு, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி, முதியோா்களுக்கு ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயா்வு, சுய உதவி குழு கடன் ரத்து, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் ரத்து உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
கடலூா் தொகுதியில் பொறியியல் கல்லூரி, மகளிா் கல்லூரி, மீன்வளக் கல்லூரி தொடங்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காகித தொழிற்சாலை, ஜவுளிப் பூங்கா, மென்பொருள் பூங்கா உள்ளிட்டவை தொடங்கப்படும் என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது தொகுதி பொறுப்பாளா் இள.புகழேந்தி, நகராட்சி முன்னாள் தலைவா்கள் து.தங்கராசு, ஏ.ஜி.ராஜேந்திரன், நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, நிா்வாகி ஆா்.விஜயசுந்தரம், விசிக தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், காங்கிரஸ் பிரமுகா் ஓவியா் ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.