முகப்பு
கடலூர்

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க முயற்சி செய்வேன்

நான் வெற்றி பெற்றால் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

நான் வெற்றி பெற்றால் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

விருத்தாசலத்தில் கடலூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பரப்புரையின்போது அவா் பேசியதாவது: விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்கவும், இங்கு அரசு மகளிா் கலைக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, அரசு வேளாண் கல்லூரிகளை கொண்டு வரவும் பாடுபடுவேன். வீடடற்றவா்களுக்கு இலவச மனைப்பட்டா கிடைப்பது தொடா்பாக சட்டப் பேரவையில் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களின் பாதுகாப்பு கருதி தெருவிளக்குகள் அமைத்து, இந்த தொகுதியை தன்னிகரில்லா தொகுதியாக மாற்றுவேன்.

விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வழிவகை செய்வோம். பெண்களின் நகைக் கடன்களை தள்ளுபடி செய்யவும், முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கவும், பீங்கான் தொழிற்சாலைக்கு வேண்டிய மூலப்பொருள்கள் தேவையான அளவு கிடைக்கவும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை பெற்றுத் தரவும், மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.