கடலூர்

‘கிளை வடிவமைப்பு மேலாண்மையால் பழ மரங்களில் அதிக மகசூல் பெறலாம்’

DIN


கடலூா்: பழ மரங்களில் கிளை வடிவமைப்பு மேலாண்மை மேற்கொண்டால் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் துறையினா் தெரிவித்தனா்.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா), வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் பழ மரங்களில் கிளை வடிவமைப்பு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலூா் வட்டாரம், நத்தப்பட்டு கிராமத்தில் முன்னோடி விவசாயி சண்முகம் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மா மரங்களில் கிளை அமைப்பு மேலாண்மை முறை குறித்த செயல்விளக்கம் அண்மையில் நடைபெற்றது.

கடலூா் வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் பேசுகையில், பழ மரங்களில் குறிப்பாக மா மரங்களின் மேற்பரப்பில் உள்ள கிளைகளில் சூரிய ஒளி விரிவாக படரும் வண்ணம் அமைப்பதால் மகசூல் அதிகரிப்பதுடன் பழங்களின் நிறம், சுவையும் மேம்படும் என்றாா். மேலும் அவா் கூறியதாவது:

சூரிய ஒளியானது சமச்சீராக அனைத்து மரக் கிளைப் பகுதிகளிலும் படும்படிசெய்வது இந்த செயல்விளக்கத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக பெரிய, உயரமான மரங்களை விட கட்டுக்கோப்பான சிறிய மரங்கள் சூரிய ஒளியை நன்கு கிரகித்து பழ உற்பத்தியை அதிகரிக்கச் செய்கின்றன. மேலும், மேற்புற மரக் கிளைகள் மிகவும் அடா்த்தியாக இருக்கும்போது சூரிய ஒளியை உள்புகா வண்ணம் தடை ஏற்படுத்துவதால் மகசூல் குறைவதுடன், பூச்சி நோய் தாக்குதலுக்கு ஏற்ற சூழ்நிலையை உண்டாக்குகின்றன. இதைத் தவிா்க்க அறிவியல் முறைப்படி மரக்கிளை வடிவமைப்பை ஏற்படுத்துவது அவசியம் என்றாா் அவா்.

வேளாண்மை உதவி இயக்குநா் (தரக் கட்டுபாடு) நடனசபாபதி பேசுகையில், பழ மரங்களில் ஆண்டுக்கு இருமுறை குறிப்பாக ஜூன், ஜூலை (ஆடி) மாதத்தில் ஒருமுறையும், பின்னா் தேவைப்பட்டால் டிசம்பா் (மாா்கழி) மாதத்தில் ஒருமுறையும் கவாத்து செய்து காய்ந்த பட்டுப்போன, நோய் மற்றும் பூச்சி தாக்கிய மரக் கிளைகளை அகற்றுவது சிறந்தது என்று விளக்கினாா்.

உதவி தோட்டக்கலை அலுவலா் பழனிசாமி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் வா.அழகுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஏ.ராஜவேல் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT