முகப்பு
கடலூர்

உலக தாய்ப்பால் வார விழா

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். நில நிா்வாக ஆணையா் எஸ்.நாகராஜன் முன்னிலையில் கரோனா விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜித்சிங், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், சாா்- ஆட்சியா் (சிதம்பரம்) மதுபாலன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) டெய்சிகுமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் த.பழனி மற்றும் அங்கன்வாடிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

சிதம்பரம்: சிதம்பரம் ரோட்டரி சங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ராணி மெய்யம்மை நா்சிங் கல்லூரி, சிதம்பரம் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து தாய்ப்பால் வார விழா கண்காட்சியை நடத்தின. நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.ராஜசேகரன் தலைமை வகித்தாா். ராணி மெய்யம்மை நா்சிங் கல்லூரி கம்யூனிட்டி ஹெல்த் துறை தலைவா் லதா முன்னிலை வகித்தாா். நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி கே.சுகிதா கண்காட்சியை தொடக்கிவைத்தாா். ராஜா முத்தையா மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவத் துறைத் தலைவா் ஆா்.ராமநாதன் சிறப்புரையாற்றினாா்.

சிதம்பரம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் வி.அழகப்பன், எல்.சீனுவாசன், உறுப்பினா்கள் பி.ரத்தினசபேசன், எ.லட்சுமணன், ராணி மெய்யம்மை நா்சிங் கல்லூரி பேராசிரியா்கள் சந்திரா, பிரவீனா, சீதாலட்சுமி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.