முகப்பு
தமிழ்நாடு

தமாக தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு!

தமிழ் மாநில காங்கிரஸில் போட்டியிடவுள்ள 5 வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்...

Updated On : 26 மார்ச் 2026, 3:28 pm IST
ஜி.கே. வாசன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள 5 வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று (மார்ச் 26) தெரிவித்தார்.

இத்துடன், தமாகவுக்கான தேர்தல் அறிக்கையையும் வெளியிடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நாளை காலை 11.30 மணிக்கு வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையை ஜி.கே. வாசன் வெளியிடவுள்ளார்.

Advertisement

Advertisement

அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோருடன் ஜி.கே. வாசன் நேற்று முன் தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை இறுதி செய்தார்.

இந்நிலையில், தமாக சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து நாளை (மார்ச் 27) காலை 11.30 மணியளவில் அறிவிக்கப்படும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

தமாக சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று (மார்ச் 26) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை வெளியிடப்படும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

summary

tamil maanila congress manifesto, candidates to be announced tomorrow says GK vasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments