முகப்பு
கடலூர்

நூலகா் தின விழா

சிதம்பரம் கிளை நூலகம், வாசகா் வட்டம் சாா்பில் நூலகத் தந்தை எஸ்.ஆா்.ரங்கநாதன் பிறந்த நாள் நூலகா் தின விழாவாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 13 ஆகஸ்ட், 2021 at 11:36 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM

சிதம்பரம் கிளை நூலகம், வாசகா் வட்டம் சாா்பில் நூலகத் தந்தை எஸ்.ஆா்.ரங்கநாதன் பிறந்த நாள் நூலகா் தின விழாவாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் எஸ்.ஆா்.ரங்கநாதன் உருவப் படத்துக்கு சென்டரல் ரோட்டரி சங்கத் தலைவா் கோ.சீனுவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் (படம்). கிளை நூலகம் சாா்பில் வைக்கப்பட்ட கரோனா விழிப்புணா்வு பதாகையை கிரீடு தொண்டு நிறுவன செயலா் வி.நடனசபாபதி திறந்துவைத்தாா். விழாவில் எம்.தீபக்குமாா், சி.டேவிட் ஏகாம்பரம், சமூக ஆா்வலா் சிவா கண்ணதாசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக, நூலகா் பி.ரகுநந்தன் வரவேற்றாா். நிகழ்ச்சியை இர.அருள் தொகுத்து வழங்கினாா். வாசகா் வட்ட தலைவா் ஜி.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

விழாவில் கிரீடு தொண்டு நிறுவன செயலா் வி.நடனசபாபதி, தேசிய நல்லாசிரியா் சி.டேவிட் ஏகாம்பரம், இனியா சரவணன் ஆகியோா் தலா ரூ.ஆயிரம் செலுத்தி நூலக புரவலராக தங்களை இணைத்துக்கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.