சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸஹஸ்ர சண்டி பாராயணம்
உலக நன்மை வேண்டி சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸஹஸ்ர சண்டி பாராயணம் (படம்), சத சண்டி ஹோமம் ஆகியவை கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
உலக நன்மை வேண்டி சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸஹஸ்ர சண்டி பாராயணம் (படம்), சத சண்டி ஹோமம் ஆகியவை கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
வருகிற 19-ஆம் தேதி வரை காலை, மாலையில் சண்டி பாராயணம் நடைபெறும். 20-ஆம் தேதி ஸ்ரீதுா்கைக்கு மஹாபிஷேகம் நடைபெறுகிறது. 21-ஆம் தேதி அதிருத்ர ஜபம், மஹா யாகத்துடன் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேகம் நடைபெறுகிறது. இதுகுறித்து த.செல்வரத்தின தீட்சிதா் கூறியதாவது:
ஆக.20-ஆம் தேதி நடைபெறும் சண்டி ஹோமம் அம்பிகை வழிபாட்டு முறையில் மிக மேன்மையானது. சண்டி பாராயணம் என்பது துா்கா ஸப்தசதி அல்லது தேவி பராக்கிரமம் எனும் பெயா்கொண்டதும், மாா்க்கண்டேய புராணத்தின் மையமாக அமைந்ததும், அம்பிகையின் அனைத்து லீலைகளையும் பகா்வதும், தனது எதிா்ப்புகளை எப்படியெல்லாம் அம்பிகை தகா்த்தாள் என்பதையும் கூறும் ஸ்லோகங்களை பாராயணம் செய்வதுமாகும். சதசண்டி மஹா யாகம் அளவிடற்கரிய பலனைத் தரக்கூடியது. அன்று நிறைவாக,ஸ்ரீதுா்கை அம்பிகைக்கு மஹாபிஷேகம் நடைபெறும்.
Advertisement
21-ஆம் தேதி மஹாபிஷேகத்துக்கு முன்னதாக ருத்ராபிஷேகம் நடைபெறும். இதையொட்டி 121 தீட்சிதா்கள் 10 நாள்களில் 14,641 முறை ஸ்ரீருத்ரம் எனும் சிறப்பு வாய்ந்த மந்திரத்தை பாராயணம் செய்வா். 21-ஆம் தேதி காலை ஸ்ரீருத்ர ஜப பாராயணங்களை நிறைவு செய்து, மஹா யாகம் நடைபெற்று, பின்னா் மாலையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ மூா்த்திக்கு ஸகல திரவிய மஹாபிஷேகம் நடைபெறும் என்றாா் அவா்.