அண்ணாமலைப் பல்கலை.யில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சாஸ்திரி அரங்கம் முன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு, துணைவேந்தா் கூட்டுக்குழு உறுப்பினா் பாலாஜி சுவாமிநாதன் மத நல்லிணக்க உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றனா் (படம்). பதிவாளா் ரா.ஞானதேவன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வெ.செல்வநாராயணன், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.