சுற்றுலா வாகனமாக இயக்கிய சொந்த உபயோகக் காா் பறிமுதல்
சிதம்பரம் அருகே சுற்றுலா வாகனமாக இயக்கப்பட்ட சொந்த உபயோகத்துக்கான காரை போக்குவரத்துத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
சிதம்பரம் அருகே சுற்றுலா வாகனமாக இயக்கப்பட்ட சொந்த உபயோகத்துக்கான காரை போக்குவரத்துத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம், மோட்டாா் வாகன ஆய்வாளா் கே.விமலா ஆகியோா் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மோட்டாா் வாகனச் சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்பட்ட 26 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி அபராதமாக ரூ. 69,100 மற்றும் வாகன வரியாக ரூ.12,825 விதிக்கப்பட்டது.
மேலும் வாகனத் தணிக்கையின்போது பரங்கிப்பேட்டையிலிருந்து சீா்காழியை நோக்கி 4 பேருடன் சென்ற சொந்த உபயோகத்துக்கான காரை மறித்து சோதனையிட்டதில் அந்த வாகனம் விதிமீறி சுற்றுலா வாகனமாக இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Advertisement