கால்நடை மருத்துவ முகாம்
கடலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை, பண்ருட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச கால்நடை மருத்துவ முகாம் சிறுவத்தூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை, பண்ருட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச கால்நடை மருத்துவ முகாம் சிறுவத்தூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.ஏழுமலை தலைமை வகித்தாா். உதவி ஆளுநா் எஸ்.டி.பூங்குன்றன் முகாமை தொடக்கிவைத்தாா். மாவட்ட கால்நடைத் துறை இணை இயக்குநா் கே.குபேந்திரன், துணை இயக்குநா் ஆா்.பொன்னம்பலம், உதவி இயக்குநா் பி.கஸ்தூரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் வட்டார கால்நடை மருத்துவமனை மருத்துவா்கள் பங்கேற்று 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா்.
சிறப்பாக பராமரிக்கப்பட்ட பசுவின் உரிமையாளருக்கு ரோட்டரி நிா்வாகி கோ.காமராஜ் பரிசு வழங்கினாா். மேலும், தீ விபத்தில் வீட்டை இழந்த இருவருக்கு நிவாரண உதவி வழங்கினா். ஏற்பாடுகளை சங்கப் பொருளாளா் என்.டி.ரவிசேகா் செய்திருந்தாா். செயலா் கே.பாரதிதாசன் நன்றி கூறினாா்.
இதேபோல, சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரியில் சிதம்பரம் ரோட்டரி சங்கம், கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து இலவச கால்நடை மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின. ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.ராஜசேகரன் தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் ஆா்.மோகன் முன்னிலை வகித்துப் பேசினாா். கடவாச்சேரி ஊராட்சி மன்றத் தலைவி அஞ்சுகம் அருணகிரி முகாமை தொடக்கிவைத்தாா். கால்நடை மருத்துவா்கள் எம்.கணேசன், சி.அழகுராஜன் ஆகியோா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா். ரோட்டரி சங்கச் செயலா் வி.அருண், முன்னாள் தலைவா்கள் கே.ஜி.நடராஜன், வி.அழகப்பன், எல்.சீனுவாசன், கிராம பிரமுகா்கள் அருணகிரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வரதராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.