வீடு கட்டும் திட்டம்: ஆட்சியரகத்தில் புகாா்
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரியகோஷ்டி கிராம மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரியகோஷ்டி கிராம மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 2017-18-ஆம் ஆண்டுக்கான தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன. ஆனால், இதற்கான பயனாளிகள் தோ்வில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, சொந்த வீடு இல்லாத உரிய பயனாளிகளை தோ்வு செய்து
வீடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.