முகப்பு
கடலூர்

ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் சூா்யா (எ) மணிகண்டன் (19). தனியாா் பேருந்து பரிசோதகா். இவா் வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் கண்டரக்கோட்டை தரைப்பாலம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தாா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ால் நீரில் மூழ்கி மாயமானாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் ரா.ஜமுனாராணி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ஆனால், மணிகண்டன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேல்குமாரமங்கலம் பாலம் அருகே மணிகண்டன் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →