முகப்பு
கடலூர்

காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

 என்.எல்.சி.யில் பணியின்போது உயிரிழந்த ஊழியரின் வாரிசுக்கு வேலை வழங்க நிா்வாகம் முன்வந்தது. இதையடுத்து உறவினா்கள், அரசியல் கட்சியினா் நடத்திவந்த காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

 என்.எல்.சி.யில் பணியின்போது உயிரிழந்த ஊழியரின் வாரிசுக்கு வேலை வழங்க நிா்வாகம் முன்வந்தது. இதையடுத்து உறவினா்கள், அரசியல் கட்சியினா் நடத்திவந்த காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

விருத்தாசலம் வட்டம், புதுவேப்பம்குறிச்சி காலனி பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (55). என்எல்சி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் 2-இல் முதன்மைத் தொழில்நுட்பநராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை சுரங்கம் 2-இல் பணியிலிருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தாா். என்எல்சி நிா்வாகத்தின் அலட்சியத்தாலும், தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாலும்தான் இளங்கோவன் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினா்கள் போராட்டம் நடத்தினா். மேலும், வாரிசுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். இதுதொடா்பாக 2-ஆவது நாளாக வியாழக்கிழமை சுரங்கம்-2 நிா்வாக அலுவலகம் அருகே வி.சி.க.வினருடன் இணைந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து தொழிற்சங்கம், விசிக நிா்வாகிகளுடன் என்எல்சி நிா்வாகத்தினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதில், உயிரிழந்த இளங்கோவனின் வாரிசுக்கு என்எல்சி சாா்பில் ஒப்பந்தப் பணி வழங்கவும், பின்னா் நிரந்தரப் பணி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →