முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் கருத்தரங்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை சாா்பில் வேளாண் விரிவாக்கக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 டிசம்பர், 2021 at 11:52 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை சாா்பில் வேளாண் விரிவாக்கக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் புல கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண் விரிவாக்கத் துறை பேராசிரியா் கா.கனகசபாபதி வரவேற்றாா். விரிவாக்கத் துறைத் தலைவா் ம.வெற்றிச்செல்வன் தொடக்கவுரை ஆற்றினாா். வேளாண் புல முதல்வா் கு.ரா.சுந்தரவரதராஜன் தனது தலைமையுரையில் வேளாண் விளைபொருள்களின் தேவை, முக்கியத்துவம், சந்தை நிலவரம், வேளாண் உற்பத்தியாளா் சங்கங்களின் செயல்பாடு பற்றி விளக்கினாா்.

கால்நடை மருத்துவா் வி.முரளிகிருஷ்ணன், தாவர நோயியல் துறை ஏ.ஈஸ்வரன், உழவியல் துறை எஸ்.பாபு, மரபியல் மற்றும் இனப் பெருக்கவியல் துறை டி.சபேசன், பூச்சியில் துறை முனைவா் சி.கதிா்வேலு, தோட்டக்கலைத் துறை முனைவா் ஜே.பத்மநாதன், மண்ணியல் துறை முனைவா் டி.இளையராஜா ஆகியோா் வேளாண் துறை சாா்ந்த பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினா். ஆராய்ச்சி மாணவி ஆா்.பாலா, வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவு பற்றி பேசினாா். கருத்தரங்கில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், சுய உதவிக் குழுவினா், வேளாண் உற்பத்தியாளா் சங்க பிரதிநிதிகள், சிறு, குறு விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஒருங்கிணைப்பாளா் த.சு.வேலு நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.