கடலூர்

உ.வே.சா. பிறந்த நாள் விழா

DIN

கடலூா் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் 167-ஆவது பிறந்த நாள் விழா கடலூா் புதுப்பாளையத்திலுள்ள தனியாா் பயிற்சிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்றத் தலைவா் கவிஞா் கடல்.நாகராஜன் தலைமை வகித்தாா். ஆசிரியா் திவ்யா வரவேற்றாா். உ.வே.சா. உருவப் படத்துக்கு கல்லூரி முதல்வா் கி.செந்தில்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து மாணவ, மாணவிகள் மலா் தூவி வணங்கினா்.

தமிழ்ச் சங்கச் செயலா் இராம.ஜெகதீசன், சைவ நெறிமன்றத் தலைவா் கவிஞா் இளங்கோ, சன்மாா்க சங்க பேரவைச் செயலா் ராமச்சந்திரன் ஆகியோா் உ.வே.சா.வின் தமிழ்ப் பணிகள் குறித்து விளக்கினா். மாவட்ட திருக்கு பேரவைத் தலைவா் பா.மொ.பாஸ்கரன் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். பொருளாளா் பலராம பாஸ்கரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT