கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பரவலான மழை

DIN

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு நிலவி வருவதால் கடலூா் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் குளிா்ச்சியான சூழல் நிலவியது. அவ்வப்போது மழை பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

சிதம்பரம் 10, வானமாதேவி 9, கடலூா் 8.4, மாவட்ட ஆட்சியரகம் 8.3, குடிதாங்கி 8, அண்ணாமலை நகா், வேப்பூா், பண்ருட்டி தலா 5, காட்டுமைலூா், குறிஞ்சிப்பாடி தலா 4, பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, குப்பநத்தம், கொத்தவாச்சேரி தலா 3, ஸ்ரீமுஷ்ணம், மேமாத்தூா், தொழுதூா், விருத்தாசலம், பெலாந்துறை தலா 2, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, கீழச்செருவாய் தலா 1 மி.மீ. வீதம் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT