ஒற்றுமையே அழகு!
மயிலைப் போல மண்ணில்தான் மற்ற பறவை உண்டோதான்?
மயிலைப் போல மண்ணில்தான்
மற்ற பறவை உண்டோதான்?
-
Advertisement
Advertisement
மயக்கும் தோகை பின்னாலே
மனதைக் கவரும் தன்னாலே!
-
அழகாய்த் தோன்றும் அதன்பீலி
அருமைச் சித்திரம் ஆகிடுமே!
-
மனதில் மகிழ்ச்சி தோன்றிடுமே
மயிலின் நடனம் கண்டாலே!
-
விரிக்கத் தோகை முழுவதிலுமே
வண்ணப் பீலி நிறைந்துள்ளதே!
-
பிரிந்து போகா பீலிகள்
புகலும் ஒற்றுமை உயர்வினையே!
-எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், சென்னை-91.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.