ஒற்றுமையே அழகு!
மயிலைப் போல மண்ணில்தான் மற்ற பறவை உண்டோதான்?
மயிலைப் போல மண்ணில்தான்
மற்ற பறவை உண்டோதான்?
-
மயக்கும் தோகை பின்னாலே
மனதைக் கவரும் தன்னாலே!
-
அழகாய்த் தோன்றும் அதன்பீலி
அருமைச் சித்திரம் ஆகிடுமே!
-
மனதில் மகிழ்ச்சி தோன்றிடுமே
மயிலின் நடனம் கண்டாலே!
-
விரிக்கத் தோகை முழுவதிலுமே
வண்ணப் பீலி நிறைந்துள்ளதே!
-
பிரிந்து போகா பீலிகள்
புகலும் ஒற்றுமை உயர்வினையே!
-எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், சென்னை-91.