அழகு ஓவியம்
வெள்ளைத் தாளில் நானுமே ஓவியம் வரைந்து பார்ப்பேனே!
வெள்ளைத் தாளில் நானுமே
ஓவியம் வரைந்து பார்ப்பேனே!
-
உயிராய் படமும் வரைந்து விட
பென்சில் ரப்பர் போதும் தான்!
-
உருவம் சிரிப்பாய் சிரித்து விடும்
கள்ளம் இன்றிப் பேசி விடும் !
-
புலி, சிங்கம் கர்ஜனையில்
பூனை எலியும் சிரித்து விடும் !
வலியே இன்றி மானும் தான்
குளத்தில் நீரைக் குடித்து விடும் !
-
அழகழகான ஓவியம் கண்டு
வகுப்பில் டீச்சர் ரசித்திடுவார் !
-
நண்பர்கள் மத்தியில் என்னையுமே
பாராட்டிப் பரிசும் தந்திடுவார்!
-ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்.