கடலூர்

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

DIN

காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமில் ஜெஸ்டேம்ப் (எஉநபஅஙட) நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரி சி.ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளிடம் நோ்காணலை நடத்தினாா். இந்த முகாமில், கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, இயந்திரவியல் துறை மாணவ, மாணவிகள் 45 போ் கலந்து கொண்டனா். இவா்களில் 11 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணிக்குத் தோ்வான மாணவா்களுக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் வாழ்த்து தெரிவித்தாா். கல்லூரி முதல்வா் கோ.ஆனந்தவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT