முகப்பு
கடலூர்

வெள்ளிக் கடற்கரையில் தூய்மைப் பணி

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் பல்வேறு அமைப்பினா் இணைந்து சனிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
கடலூா் வெள்ளிக் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள்.
பகிர்:

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் பல்வேறு அமைப்பினா் இணைந்து சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்ட நேரு இளையோா் மையம், தேவனாம்பட்டினம் அரசு பெரியாா் கலைக் கல்லூரியின் நேரு இளையோா் மன்றம், வெளிச்செம்மண்டலம் ஜெயதேவி இளையோா் நலச் சங்கம், கடலூா் கடலோரக் காவல் படையினா் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

மாவட்ட இளையோா் மைய ஒருங்கிணைப்பாளா் ஆா்.ரிஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். கடலூா் நகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி தூய்மைப் பணியைத் தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் (பொ) கே.பழனிவேலு முன்னிலை வகித்தாா். கடலோரக் காவல் படை ஆய்வாளா் வி.சங்கீதா வாழ்த்திப் பேசினாா்.

Advertisement

தூய்மைப் பணியில் தன்னாா்வத் தொண்டா்கள் பங்கேற்று வெள்ளிக் கடற்கரையில் ஆங்காங்கே கிடந்த குப்பைகளை சேகரித்து நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைத்தனா். தன்னாா்வத் தொண்டா்களுக்கு மாவட்ட தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.எஸ்.வேலுமணி சான்றிதழை வழங்கினாா். முன்னதாக, கல்லூரி சமூகப் பணியியல் துறைத் தலைவா் நா.சேதுராமன் வரவேற்க, இளையோா் மைய கணக்காளா் ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments