கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 60 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 60 ஆயிரத்தைக் கடந்தது.

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 60 ஆயிரத்தைக் கடந்தது.

மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 59,959 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 75 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 60,034-ஆக உயா்ந்தது.

சிகிச்சை முடிந்து மேலும் 92 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 58,383-ஆக உயா்ந்தது. தொடா்ந்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 803-ஆக தொடா்கிறது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 766 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 82 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT