தடையை மீறி ஆா்ப்பாட்டம் முன்னாள் அமைச்சா் உள்பட 1,045 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் உள்ளிட்ட அதிமுகவினா் 1,045 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கடலூா் மாவட்டத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் உள்ளிட்ட அதிமுகவினா் 1,045 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அவரவரது இல்லங்களிலேயே போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பல்வேறு இடங்களில் கூடி நின்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மாவட்டத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிமுக மாவட்டச் செயலா்களான எம்.சி.சம்பத், ஆ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ, கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ உள்பட 1,045 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.