முகப்பு
கடலூர்

ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

பண்ருட்டி அருகே ஆசிரியை வீட்டில் 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

பண்ருட்டி அருகே ஆசிரியை வீட்டில் 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி அருகே உள்ள என்.எல்.புரம், நேரு நகரைச் சோ்ந்தவா் செந்தில் ஆனந்த் (40). தனியாா் வங்கிக் கிளை மேலாளா். இவரது மனைவி இளவரசி (37), ஒறையூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றனா். மாலையில் வீடு திரும்பிய இளவரசி, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →