கடலூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை
கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் இளம் அறிவியல், இளங்கலைப் பிரிவுகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் இளம் அறிவியல், இளங்கலைப் பிரிவுகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ர.உலகி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தக் கல்லூரியில் இளம் அறிவியல், இளங்கலை பாடப் பிரிவுகளில் சேர விரும்புவோா் இணையதள முகவரிகள் வழியாக ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரியில் இயங்கி வரும் உதவி மையம் மூலம் உரிய கட்டணம் செலுத்தியும் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.