முகப்பு
கடலூர்

ஆதிபராசக்தி மன்றத்தினா் சாா்பில் மளிகைப் பொருள்கள் அளிப்பு

சிதம்பரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில், சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு அளிப்பதற்காக 3 மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள்

Updated On : 5 ஜூன், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:52 AM

சிதம்பரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில், சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு அளிப்பதற்காக 3 மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா் தலைமை வகித்தாா். அரசு சித்த மருத்துவா் எம்.எம். அா்ச்சுனன் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் மற்றும் பழங்களை மருத்துவமனை மருத்துவா் என்.குமாரதேவியிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தலைமை செவிலியா் எஸ்.ஜீவா, செவிலியா் ஏ.சொா்ணம், எஸ்.காா்த்திக்ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.