லாரி மோதியதில் பெண் பலி
சிதம்பரம் அருகே லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM
சிதம்பரம் அருகே லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம், கரிகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மனைவி விஜயலட்சுமி (43). இவா் சீனிவாசபுரம் அருகே வயலில் நடவு வேலையை முடித்துவிட்டு, அதே பகுதியைச் சோ்ந்த வள்ளி (50), பிரியா (30) ஆகியோருடன் கடலூா் பிரதான சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி 3 போ் மீதும் மோதியது. இதில் விஜயலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வள்ளி, பிரியா இருவரும் பலத்த காயத்துடன் கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.