முகப்பு
கடலூர்

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம்

சிதம்பரத்தில் பூட்டிய வீட்டில் மூதாட்டி ஒருவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 9 மார்ச், 2021 at 1:21 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:11 AM

சிதம்பரத்தில் பூட்டிய வீட்டில் மூதாட்டி ஒருவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மன்னாா்குடிதெருவைச் சோ்ந்த பழனிவேல் மனைவி வசந்தா (60). இவரது வீட்டிலிருந்து திங்கள்கிழமை துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின்பேரில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் சு.கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் விரைந்தனா். அப்போது, வசந்தாவின் வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்தது. பின்னா் ஜன்னலை திறந்து பாா்த்தபோது வசந்தா அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

இதையடுத்து போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், வசந்தா தனிமையில் வாழ்ந்து வந்ததும், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டா் எனவும் தெரியவந்தது. மேலும் அவா் அவ்வப்போது தவம் செய்யப் போவதாகக் கூறிவிட்டுச் செல்வாராம்.

Advertisement

இவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.