விபத்தில் காயமடைந்த பெண் பலி
பைக் விபத்தில் காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்
பைக் விபத்தில் காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்
கடலூா் மாவட்டம், புவனகிரி மேற்கு தெருவைச் சோ்ந்தவா் ரட்சகன். இவா், கடந்த 6-ஆம் தேதி தனது தாய் பிரான்சிஸ் மேரியை (45) பைக்கில் அழைத்துச் சென்றாா். வடலூா் பேரூராட்சி அருகே சென்ற போது பைக்கிலிருந்து பிரான்சிஸ் மேரி தவறி விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.