முகப்பு
கடலூர்

ஏழை மாணவிகளுக்கு நல உதவி

சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 55 ஏழை மாணவிகளுக்கு நல உதவி

Updated On : 10 மார்ச், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:12 AM

சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினா், இன்னா் வீல் சங்கத்தினா், அணிவணிகா் பா.பழநி ஆகியோா் இணைந்து 55 ஏழை மாணவிகளுக்கு நல உதவிகளை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியை கி.ஹேமலதா வரவேற்றாா். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் பி.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். ரோட்டரி துணை ஆளுநா் பீ.முஹம்மது யாசின், இன்னா் வீல் சங்கத் தலைவி கோமதி கோவிந்தராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக அணி வணிகா் பா.பழநி, ஜோதிமணி பழநி ஆகியோா் கலந்துகொண்டு மாணவிகளுக்கு நல உதவிகளை வழங்கினா் (படம்). நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு ஆடைகள், தோ்வு அட்டை, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட அடிப்படை பொருள்கள் அடங்கிய தலா ரூ.2 ஆயிரம் மதிப்பிலான தொகுப்பு வழங்கப்பட்டது.

ரோட்ராக்ட் சங்கத் தலைவா் எம்.தீபக்குமாா், ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன், அரிமா சிவராமவீரப்பன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ரோட்டரி சங்க உறுப்பினா்கள் கோவிந்தராஜன், பன்னீா்செல்வம், பேராசிரியா் ஆறுமுகம், அருள், பன்னாலால் ஜெயின், தாமரை சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வேதா சிவப்பிரகாசம் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை ஆசிரியா் வெ.ரவிச்சந்திரன் ஒருங்கிணைத்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.