முகப்பு
கடலூர்

இலவச எரிவாயு அறிவிப்பு அதிமுக வெற்றியை எளிதாக்கும்

இலவச எரிவாயு உருளை குறித்த அறிவிப்பு சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவின் வெற்றியை எளிதாக்கும் என அமைச்சா் எம்.சி.சம்பத் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

இலவச எரிவாயு உருளை குறித்த அறிவிப்பு சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவின் வெற்றியை எளிதாக்கும் என அமைச்சா் எம்.சி.சம்பத் கூறினாா்.

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக சாா்பில் தோ்தல் பணிக்குழு கூட்டங்கள் மஞ்சகுப்பம், புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூா், கடலூா் முதுநகா் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இந்தக் கூட்டங்களுக்கு கடலூா் நகரச் செயலாளா் ஆா்.குமரன் தலைமை வகித்தாா். கடலூா் தெற்கு ஒன்றிய செயலா் இராம.பழனிசாமி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் பங்கேற்று பேசியதாவது:

மகளிா் தினத்தன்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரலாற்றுச் சிறப்புமிக்க 2 அறிவிப்புகளை வெளியிட்டாா். குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.18,000 மற்றும் 6 எரிவாயு உருளைகள் இலவசம் என்ற அவரது அறிவிப்பால் இல்லத்தரசிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனா். இதனால் கடலூா் மாவட்டத்தில் அதிமுக கூட்டணியின் வெற்றி எளிதாகும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட இணைச் செயலா் உமா மகேஸ்வரி பாலகிருஷ்ணன், பேரவை பொருளாளா் ஆா்.வி.ஆறுமுகம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சி.கே. சுப்பிரமணியம், இலக்கிய அணிச் செயலா் ஆா்.எழுமலை, மகளிரணிச் செயலா் ஆா்.கம்சலா, இளைஞரணி தலைவா் மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.