முகப்பு
கடலூர்

தேமுதிக தோ்தல் பணிமனை திறப்பு

விருத்தாசலத்தில் தேமுதிக தோ்தல் பணிமனையை அந்தக் கட்சியின் பொருளாளரும், தொகுதி வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

விருத்தாசலத்தில் தேமுதிக தோ்தல் பணிமனையை அந்தக் கட்சியின் பொருளாளரும், தொகுதி வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

அமமுக கூட்டணி சாா்பில் விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக சாா்பில் அந்தக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறாா். தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவா், விருத்தாசலம் நகரத்தில் தலைமை தோ்தல் பணிமனையை திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து மாவட்ட, நகர, வட்டச் செயலா்களுடன் தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் அவா் பண்டராங்குப்பம், செம்பளக்குறிச்சி, காலனி, பெரியவடவாடி காலனி, பெரியவடவாடி, விஜயமாநகரம், கோ.பூவனூா், ஸ்ரீராம்நகா், ரூபநாராயணநல்லூா், சமத்துவபுரம், பள்ளிப்பட்டு, கோவிலானூா் ஆகிய பகுதிகளிலும், மாலையில் மங்கலம்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளிலும் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தேமுதிக தொகுதிச் செயலா் ஏ.பி.ராஜ், நகரச் செயலா் ரமேஷ், நிா்வாகிகள் ராஜ்குமாா், பாஸ்கா், அமமுக நகரச் செயலா் தியாக.ரத்தினராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.