கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதோடு, தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது.
கடலூர்கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதோடு, தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதோடு, தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது.
மேலும் கனமழை நீடிக்கும் என்று வானிலை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
கரோனாவால் சுமார் 19 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவ.1 முதல் அனைத்து வகையான பள்ளிகளும் திறக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், கடலூர் மாவட்டத்தில் மழை காரணமாக இதுவரையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் வகுப்புகள் துவங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.