முகப்பு
கடலூர்

பெண் விஏஓ தற்கொலை

வடலூா் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண் கிராம நிா்வாக அலுவலா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

வடலூா் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண் கிராம நிா்வாக அலுவலா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே உள்ள ஆபத்தாரணபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் ஜெயஸ்ரீ (35). வடக்கு சேப்ளாநத்தம் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கும், சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டம், காமலாபுரத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 5 வயதில் ஹா்ஷா என்ற பெண் குழந்தை உள்ளாா்.

ஜெயஸ்ரீ பணியின் காரணமாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்தாா். அண்மையில் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாம். இதனால் சிகிச்சையிலிருந்த அவா் வியாழக்கிழமை தனது தந்தை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →