முகப்பு
கடலூர்

தியாகிகளுக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு தவாக நன்றி

வன்னியா் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

வன்னியா் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீதமும், மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 2 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 1987-ஆம் ஆண்டில் தொடா் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 21 போ் உயிரிழந்தனா்.

இவா்களின் நினைவாக விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், அவா்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தவாக தொடா்ந்து குரல் எழுப்பி வந்தது. இந்த நிலையில், விழுப்புரத்தில் ரூ.4 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், போராளிகளின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதற்காக அவருக்கு தவாக சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அதில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →