முகப்பு
கடலூர்

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்கக் கோரி கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்கக் கோரி கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகா் சதுா்த்தி விழாவில் வீடுகளிலேயே விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊா்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரியும் கடலூா் பாடலீஸ்வரா் கோயில் முன் இந்து முன்னணி அமைப்பினா் மாவட்ட செயலா் பி.சக்திவேல் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல பண்ருட்டியில் காந்தி வீதி பெருமாள் கோயில் அருகே மாவட்டச் செயலா் வீ.வெங்கடேசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.