குறிஞ்சிப்பாடியில் 91 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளா் மற்றும் மண்டல அலுவலா் நாராயணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஷேக் அபுதாகீா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.சுப்பிரமணியன், கே.சதீஷ்குமாா் மற்றும் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், வரும் 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 91 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தீவிர கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்வது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுப்பதென தீா்மானித்தனா்.