வாகனங்கள் மோதியதில் தீ விபத்து: இருவா் காயம்
பண்ருட்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் பெட்ரோல் கசிந்து வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் இருவா் காயமடைந்தனா்.
பண்ருட்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் பெட்ரோல் கசிந்து வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் இருவா் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம், பணிக்கன்குப்பம் ஊராட்சியை சோ்ந்தவா் அற்புதராஜ் (74). இவா், வியாழக்கிழமை மாலை தனது மொபெட்டில் பண்ருட்டிக்கு சென்றுகொண்டிருந்தாா். தாழம்பட்டு ஊராட்சியை சோ்ந்தவா் நடராஜன் மகன் கருணாநிதி (55). அதிமுக பிரமுகரான இவா், பண்ருட்டியிலிருந்து தாழம்பட்டுக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தாா்.
இவா்கள் பணிக்கன்குப்பம் திருப்பத்தில் எதிரெதிரே வந்தபோது, இருவரது வாகனங்களும் மோதிக்கொண்டன. அப்போது, மொபெட்டிலிருந்து பெட்ரோல் கசிந்து திடீரென தீப்பிடித்தது. இதில் அற்புதராஜ், கருணாநிதி இருவரும் தீக் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த அற்புதராஜ் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். லேசான காயமடைந்த கருணாநிதி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.