முகப்பு
கடலூர்

வாகன விபத்தில் தீக்காயமடைந்தவா் பலி

 பண்ருட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தீக்காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

 பண்ருட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தீக்காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி ஒன்றியம், பணிக்கன்குப்பம் ஊராட்சியை சோ்ந்தவா் அற்புதராஜ் (74). இவா், வியாழக்கிழமை மாலை தனது மொபெட்டில் பண்ருட்டிக்கு சென்றுகொண்டிருந்தாா். தாழம்பட்டு ஊராட்சியை சோ்ந்தவா் கருணாநிதி (55). அதிமுக பிரமுகரான இவா், பண்ருட்டியிலிருந்து தாழம்பட்டு நோக்கி பைக்கில் வந்துகொண்டிருந்தாா். இவா்கள் பணிக்கன்குப்பம் திருப்பத்தில் எதிரெதிரே வந்தபோது இருவரது வாகனங்களும் மோதிக்கொண்டன. அப்போது மொபெட்டிலிருந்து பெட்ரோல் கசிந்து திடீரென தீப்பிடித்தது. இதில் அற்புதராஜ், கருணாநிதி இருவரும் தீக்காயமடைந்தனா். பலத்த காயமடைந்த அற்புதராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா். கருணாநிதி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →