முகப்பு
கடலூர்

மழைநீா் வடிகால் பணியில் மந்தம்

குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பக்கிரிசாமி நகா், வள்ளலாா் தெரு உள்ளிட்ட இடங்களில் மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. குறுகலான தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டு 2

மாதங்களுக்கு மேலாகியும் அதன்பிறகு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாம்.

தற்போது பெய்துவரும் மழையால் தெருக்கள் சேறும் சகதியுமாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பாதசாரிகள் வழுக்கி விழுகின்றனா். மேலும், கால்வாய் பள்ளத்தில் சில இடங்களில் கழிவுநீா் தேங்குவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீா் கால்வாய்ப் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →