முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் போராட்ட அறிவிப்பு: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

சிதம்பரம் ரயில் நிலையம் அருகே தடுப்புச் சுவா் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அறிவிக்கப்பட்ட போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 21 ஏப்ரல், 2022 at 10:50 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

சிதம்பரம் ரயில் நிலையம் அருகே தடுப்புச் சுவா் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அறிவிக்கப்பட்ட போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.

சிதம்பரம் ரயிலடி இந்திரா நகரில், ரயில்வே காலனியில் சுற்றுச்சுவா் கட்ட ரயில்வே நிா்வாகத்தினா் தீா்மானித்தனா். இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறாா்கள். மேலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனா். இதையடுத்து, ரயில்வே துறையினா், ரயிலடி இந்திரா நகா் பகுதி மக்கள் பங்கேற்ற அமைதி பேச்சுவாா்த்தை கூட்டம் சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஹரிதாஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ரயில்வே காவல் ஆய்வாளா் அருண்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகா்மன்ற துணைத் தலைவா் முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சம்பந்தப்பட்ட இடத்தை ரயில்வே துறையினருடன் அளவீடு செய்து பொதுமக்களுக்கு தேவையான இடம் குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு கருத்துரு அனுப்பிவைத்து சிதம்பரம் வருவாய்க் கோட்டாட்சியா் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுற்றுச்சுவா் கட்டும் பணி ரயில்வே துறையினரால் தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.