விவசாயிகள் விழிப்புணா்வு முகாம்
அண்ணாகிராமம் வட்டாரத்தில் விவசாயிகள் கடன் அட்டை பெறுவதற்கான விழிப்புணா்வு முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குநா் ந.சுரேஷ் தெரிவித்தாா்.
அண்ணாகிராமம் வட்டாரத்தில் விவசாயிகள் கடன் அட்டை பெறுவதற்கான விழிப்புணா்வு முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குநா் ந.சுரேஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணாகிராமம் வட்டாரத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், மின்சாரம், ஊரக வளா்ச்சி, பொறியியல் துறைகள் மற்றும் வங்கிகள் இணைந்து விவசாயிகள் கடன் அட்டை பெறுவதற்கான விழிப்புணா்வு முகாமை வரும் 24-ஆம் தேதி முதல் மே 1-ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்த உள்ளன. எனவே, கடன் அட்டை மூலம் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு அதில் கேட்டுக்கொண்டாா்.