முகப்பு
கடலூர்

மருத்துவ மாணவா்கள் 8-ஆவது நாளாக போராட்டம்

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியான சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை 8-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஏப்ரல், 2022 at 10:54 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:36 PM

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியான சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை 8-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கல்லூரியில் அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வலியுறுத்தி மருத்துவ மாணவா்கள் கடந்த 21-ஆம் தேதி முதல் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவா்கள் தவிர மற்ற மருத்துவ மாணவா்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், மாணவா்கள் விடுதியை காலி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மாணவா்கள் விடுதியை காலி செய்யாமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இவா்களது போராட்டம் 8-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.